Published : 22 Mar 2018 08:40 AM
Last Updated : 22 Mar 2018 08:40 AM
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிக்கமகளூருவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “சிருங்கேரி மடத்தில் உள்ள குழந்தைகளிடம் மதம் என்றால் என்ன? என கேட்டேன். அதற்கு குழந்தைகள் ‘மதம் என்றால் சத்தியம். மதம் என்றால் அன்பு’ என்றார்கள். ஆனால் பிரதமர் மோடி சத்தியத்தையும் அன்பையும் மறந்துவிட்டு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு, அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். ஆட்சியே முடிய போகிறது. எப்போது வங்கியில் ரூ.15 லட்சத்தை செலுத்துவீர்கள் மோடி? என மக்கள் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT