Last Updated : 29 Mar, 2018 04:15 PM

 

Published : 29 Mar 2018 04:15 PM
Last Updated : 29 Mar 2018 04:15 PM

உத்தரப் பிரதேசத்தில் தனியார் வங்கியின் போலி வங்கிக் கிளையை நடத்தி வந்தவர் கைது

உத்தரப் பிரதேசத்தில் தனியார் வங்கியின் கிளை வங்கியை போலியாக நடத்திவந்தவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.கங்குலி கூறியதாவது:

நேற்று உத்தரப் பிரதேசம் வந்திருந்த வாரணாசி மற்றும் டெல்லியில் இருந்து வங்கி அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கர்நாடக வங்கியின் கிளை ஒன்று இங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதனை நடத்தி வந்த வினோத் குமார் கும்ப்ளே என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து, ரூ .1.37 லட்சம் ரொக்கம், மூன்று கணினிகள், ஒரு மடிக்கணினி, இரண்டு செல்ஃபோன்கள், ஒரு பிரிண்டர், சில வங்கி பாஸ்புத்தகங்கள், சம்பளம் மற்றும் டெபாசிட் சீட்டுகள் மற்றும் இதர பொருட்கள் மீட்கப்பட்டன.

பாலியா கொட்வாலி வழக்கோடு தொடர்புபடுத்தி இவ்வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருதாக காவல் கண்காணிப்பாளர் கூறினர்.

போலி மருத்துவர், போலி போலீஸ் அதிகாரி என்று தொடரும் போலி மோசடிகளின் வரிசையில் ஒரு தனிமனிதன் போலி வங்கிக் கிளை நடத்திவந்தது முற்றிலும் நூதன மோசடியாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x