Published : 29 Mar 2018 07:59 AM
Last Updated : 29 Mar 2018 07:59 AM

ஏழுமலையானை இஸ்ரோ தலைவர் சிவன் தரிசித்தார்

திருப்பதி ஏழுமலையானை இஸ்ரோ தலைவர் கே. சிவன் நேற்று தரிசனம் செய்தார்.

இஸ்ரோ தலைவர் கே. சிவன், நேற்று காலை விஐபி பிரேக் நேரத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தரிசன ஏற்பாடுகள் செய்தனர். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.சிவன் கூறும்போது, “வியாழக்கிழமை மாலை 4.56 மணிக்கு பிஎஸ்எல்வி-எஃப் 08 விண்கலம் மூலமாக, ஜி-சாட்-6ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட வேண்டுமென ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டேன். தகவல் தொழில்நுட்பத்தை மேலும் பலப்படுத்த இந்த விண்கலம் உதவும். அடுத்த விண்கலம் 15 நாட்களில் செலுத்தப்படும். சந்திராயன் விண்கலம் ஆகஸ்ட் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x