Last Updated : 15 May, 2019 01:13 PM

 

Published : 15 May 2019 01:13 PM
Last Updated : 15 May 2019 01:13 PM

பிரதமர் மோடியின் சகோதரர் போலீஸ்நிலையம் முன் திடீர் தர்ணா போராட்டம்

பிரமதர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி நேற்று ஜெய்பூர் செல்லும் வழியில் போலீஸ் நிலையம் முன் திடீரென தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. நேற்று அஜ்மீரில் இருந்து ஜெய்பூருக்கு சாலை மார்க்கமாக காரில் சென்றார். அப்போது, பாக்ரூ போலீஸ் நிலையம் வந்ததும் அங்கு தனது வாகனத்தை நிறுத்தி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியிடம் சென்று போலீஸார் விசாரணை நடத்தியதில், தன்னுடன் வரும் தனிப்பாதுகாவலர்களுக்கு தனியாக வாகனம் அளிக்க வேண்டும், தன்னுடன் யாரும் வரக்கூடாது என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதையடுத்து, ஜெயப்பூர் போலீஸ் ஆணையர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா தொலைபேசியில் பிரகலாத் மோடியிடம்  பேச்சு நடத்தியபின் சமாதானம் ஏற்பட்டு போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதுகுறித்து ஜெயப்பூர் போலீஸ் ஆணையர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் கூறுகையில், " பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, தன்னுடன் பாதுகாப்புக்காக வரும் போலீஸாருக்கும் தனியாக வாகனம் ஏற்பாடு செய்யக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால், அவருடன் இரு தனிக் காவலர்கள் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் பிரகலாத் மோடி செல்லும் வாகனத்தில்தான் செல்ல முடியும். அதுதான் விதிமுறை தனியாக வாகனம் ஏற்பாடு செய்ய முடியாது என்பதை தெரிவித்தோம். ஆனால், பாதுகாவலர்களுக்கு தனிவாகனம் அளிக்கக் கோரினார். இதை நாங்கள் ஏற்கவில்லை, விதிமுறைகளின்படி செய்கிறோம் என்றவுடன் அவர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து,பிரகலாத் சென்ற வாகனத்திலேயே இரு போலீஸாரும் உடன் சென்றனர் " எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் சகோதரர் திடீரென போலீஸ் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டது ஒருமணிநேரம் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x