Published : 08 May 2019 12:00 AM
Last Updated : 08 May 2019 12:00 AM
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது. .
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போதைய அரசியல் நிலவரம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.
எனவே, மத்தியில் புதிய ஆட்சி அமைவதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். மத்தியில் ஆளும் அரசுகள் மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக அரசு முடிவுக்கு வரும். மதச்சார்பற்ற மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிக்கும் அரசு அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT