Published : 03 May 2019 07:00 AM
Last Updated : 03 May 2019 07:00 AM
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தை களை பயன்படுத்துவது தொடர் பான புகாருக்கு பதில் அளிக்கும்படி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு, தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் (என்சிபிசிஆர்) நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
யார் புகார் அளித்தது என்ற தகவல் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை. பிரியங்கா காந்தி முன்னிலையில் குழந்தைகள் சிலர் தரக்குறைவாக கோஷமிட்டு பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோவின் அடிப்படையில் என்சிபிசிஆர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரச்சாரத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெயர்கள், முகவரி, எந்த இடத்தில் குழந்தைகள் கோஷங்கள் எழுப்பினர், பிரச்சாரத்துக்கு அந்த குழந்தைகள் எப்படி அழைத்துவரப்பட்டனர் என்பன உட்பட அனைத்து தகவல் களையும் 3 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி பிரியங்காவுக்கு என்சிபிசிஆர் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைச் சேர்க்க கூடாது என்று பாம்பே உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT