Published : 25 May 2019 07:23 AM
Last Updated : 25 May 2019 07:23 AM

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்; மே 30-ல் பிரதமராக பதவியேற்கிறார் மோடி: புதிய அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசி னார். வரும் 30-ம் தேதி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற் கிறார்.

மக்களவைத் தேர்தல் முடிவு கள் நேற்று முன்தினம் வெளி யாகின. இதில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களைப் பிடித்தது.

அமைச்சரவை ராஜினாமா

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. இதில் 16-வது மக்கள வையைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய் யப்பட்டது. இதன் பிறகு குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, அமைச்சரவையின் பரிந் துரையை அளித்தார். மேலும் தனது அமைச்சரவையின் ராஜி னாமா கடிதத்தையும் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட குடி யரசுத் தலைவர், புதிய அரசு பதவியேற்கும் வரை ஆட்சியில் நீடிக்க பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய மக்களவையின் பதவிக் காலம் வரும் 3-ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த சில நாட்களில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உட்பட 3 ஆணையர்களும் குடி யரசுத் தலைவரை சந்தித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலை அளிப் பார்கள். அதன்பிறகு புதிய மக் களவையை அமைப்பதற்கான நடவடிக்கையை குடியரசுத் தலைவர் மேற்கொள்வார்.

தேசிய ஜனநாயக கூட்டணி யின் புதிய எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட உள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொள்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

வாரணாசி பயணம்

பதவியேற்பதற்கு முன்பாக வாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் தன்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வரும் 28-ம் தேதி தனது சொந்த தொகுதிக்கு மோடி செல்கிறார். மேலும் குஜராத் தின் அகமதாபாத்தில் வசிக்கும் தனது தாயார் ஹீராபென்னையும் சந்தித்து ஆசி பெற திட்ட மிட்டுள்ளார்.

ஒருநாள் முழுவதும் குஜ ராத்தில் அவர் தங்கியிருப்பார் என்று தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பதவி யேற்கும்போது அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவையில் மாற்றம்

இந்த அமைச்சரவையில் உள் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறைக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்று தகவல் கள் வெளியாகி உள்ளன. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அமைச்சரவையில் சேர்க்கப்பட லாம் என்றும் அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு முக்கிய இலாகா வழங்கப்படலாம் என்றும் கூறப் படுகிறது.

வெளிநாட்டுத் தலைவர்கள்

கடந்த 2014-ம் ஆண்டில் நரேந் திர மோடி பிரதமராக பதவி யேற்றபோது அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட தெற்காசிய தலை வர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இந்த முறை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று கூறப் படுகிறது. பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லாததால் அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x