Last Updated : 21 May, 2019 06:11 PM

 

Published : 21 May 2019 06:11 PM
Last Updated : 21 May 2019 06:11 PM

ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு: எதிர்க்கட்சிகளுக்கு உத்தரவாதம் அளிக்காத இந்திய தேர்தல் ஆணையம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தை 22 எதிர்க்கட்சியினரும் சந்தித்தனர். அனைத்துச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குகளையும் ஒப்புகைச் சீட்டு மூலம் சரிபார்க்க வெண்டும், அதாவது 100% ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு இருக்க வெண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தக் கோரிக்கைக்கு எந்த வித உத்தரவாதமான பதிலையும் தேர்தல் ஆணையம் தரவில்லை. அதாவது வாக்கிற்கும் ஒப்புகைச் சீட்டுப் பதிவுக்கும் சரிபார்க்கும் போது பொருத்தப்பாடு இல்லை எனில் அனைத்து சட்டமன்ற வாக்கு எந்திர ஒப்புகைச்சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்தன.

 

மேலும் தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையில் ஒப்புகைச் சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும், பிறகுதான் வாக்குகளை எண்ண வேண்டும் என்று வலியுறுத்தினர். கடைசி சுற்று வாக்குகள் எண்ணிக்கையை முடித்த பிறகு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்றனர்.

 

“ஒப்புகைச் சீட்டு எந்திரத்தின் வாக்குகள் முதலில் எண்ணப்பட வேண்டும். இதில் ஏதாவது பொருத்தமின்மைகள் தெரிந்தால் அந்தப் பகுதி முழுதுமான ஒப்புகைச்சீட்டுகளும் சரிபார்க்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியதாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

 

மற்றொரு காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவிக்கும் போது, கடந்த சில மாதங்களாகவே ஒப்புகைச்சீட்டு சரிபார்ப்பு குறித்து நாங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் இப்போது,  நாளை (புதன்) சந்தித்து இது குறித்து விவாதிக்கிறோம் என்கிறது தேர்தல் ஆணையம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x