Last Updated : 22 May, 2019 12:05 PM

 

Published : 22 May 2019 12:05 PM
Last Updated : 22 May 2019 12:05 PM

தொடரும் தேடுதல் வேட்டை: காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

 

 

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

 

ஜம்மு காஷ்மீரின் குல்கால் பகுதியில் உள்ள கோபால்போராவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

 

கோபால்போராவில் தீவிரவாதிகள் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக நம்பகத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாதுகாப்புப் படையினர் திங்கட்கிழமை மாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 

இதை எதிர்பார்க்காத தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி தரும் விதமாக பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

 

இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் தற்போது சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதேபோல அவர்களிடமிருந்த ஆயுதங்களும் வெடிப்பொருட்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.

 

உயிரிழந்த தீவிரவாதிகளின் விவரங்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வழியாக ஊடுரும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x