Published : 28 May 2019 11:34 AM
Last Updated : 28 May 2019 11:34 AM
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் கோயிலில் இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி வந்தார். திருமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். முன்னதாக தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT