Published : 27 May 2019 12:00 AM
Last Updated : 27 May 2019 12:00 AM
முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் (ஆர்எல்எஸ்பி) 2 எம்எல்ஏக்களும் ஒரு எம்எல்சியும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்தனர்.
மக்களவைத் தேர்தலில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சட்டப்பேரவை, மேலவையில் இடம்பெற்றிருந்த 3 பேருமே கட்சி மாறியது பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தக் கட்சியைச் சேர்ந்த லல்லன் பாஸ்வான், சுதான்ஷு சேகர் ஆகிய 2 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், சஞ்சீ்வ் சிங் ஷ்யாம் சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளார்.
இவர்கள் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்வதாக தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக பேரவை சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரியும் மேலவை துணைத்தலைவர் ஹரூன் ரஷீதும் உறுதி செய்துள்ளனர்.
இவர்கள் இணைவதில் ஆட்சேபம் இல்லை என ஐக்கிய ஜனதாதளம் கட்சி கொடுத்துள்ள ஒப்புதல் கடிதத்தை 3 பேரும் இணைத்துள்ளதாகவும் இனி இவர்கள் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ, எம்எல்சியாக கருதப்படுவார்கள் என்று சவுத்ரி, ரஷீத் ஆகியோர் தெரிவித்தனர்.
பாஜக கூட்டணியிலிருந்து விலகிய குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்எல்எஸ்பி) பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் அமைத்த மெகா கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லைபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக குஷ்வாஹா அறிவித்தபோதே அதற்கு லல்லன், சுதான்ஷு, சஞ்சீவ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT