Published : 30 May 2019 06:30 PM
Last Updated : 30 May 2019 06:30 PM

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்ட்டர் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் பகுதியில் இன்று நடைபெற்றது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''தங்கர் போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் எதிர்பாராத விதமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் தெரியவில்லை. அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது''.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x