பிரதமர் மோடி பேசியதில் தவறில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பிரதமர் மோடி பேசியதில் தவறில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலம், லாத்தூர் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதில் எந்தவிதமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 9-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், லாத்தூரில் பிரதமர் மோடி தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த மக்களிடம், " புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, தீவிரவாதிகளை விமானப்படை மூலம் யார் தாக்குதல் நடத்தினார்களோ அவர்களுக்கு முதல்முறையாக வாக்களிப்பவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துங்கள்" என்று பேசி இருந்தார்.

ராணுவ வீரர்கள், பெயர்கள், அவரின் செயல்பாடுகள் குறித்து அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தநிலையில், பிரதமர் மோடி பேசி இருந்தார். இது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கக் கோரின.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா தேர்தல் அதிகாரியிடம் இருந்து பிரதமர் மோடியின் பேச்சு குறித்த அறிக்கை கேட்டது. அந்த அறிக்கையை ஆய்வு செய்தபின் அதில் எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லை எனத் தெரிவித்தது.

அது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், " ஓஸ்மானாபாதா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரி அனுப்பிவைத்த 11 பக்க அறிக்கையை நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில் பிரதமர் மோடி எந்தவிதமான விதிமுறைகளையும் மீறி பேசியதாக இல்லை" எனத் தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in