Published : 17 Sep 2014 10:22 AM
Last Updated : 17 Sep 2014 10:22 AM
ஆந்திர மாநிலத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், வீடு களுக்கு 24 மணிநேர தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசுடன் நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
விசாகப்பட்டினத்தில் 4 ஆயிரம் மெகாவாட் தெர்மல் மின்சாரம் உற்பத்திக்கும், ராயலசீமா மாவட்டங்களில் 2,500 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்திக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தை அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையச் செய்வார் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரைப் போன்ற திறமையான முதல்வரை காணுவது அரிது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT