Published : 18 Apr 2019 01:42 PM
Last Updated : 18 Apr 2019 01:42 PM

சத்தீஸ்கரில் பாஜக நக்சலைட்டுகளுடன் கைகோர்த்துள்ளனர்: முதல்வர் பூபேஷ் பாகெல் பகீர் குற்றச்சாட்டு

சத்தீஸ்கரில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் பலியானதையடுத்து பல கேள்விகளை பாஜக முன்னிறுத்தியது. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

 

“தி இந்து”(ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்ததாவது:

 

கடந்த 3  மாதங்களில் நம் படைகள் 17 மாவோயிஸ்ட்களை கொன்றுள்ளது. ஆனால் நக்சலிசத்தை ஒழிக்க கூடுதல் முயற்சி தேவை.  துப்பாக்கி ரவைகள் மூலம் மட்டுமே அதை ஒழிக்க முடியுமா? அவர்களும் சுடுவார்கள், நம் தரப்பிலிருந்தும் சுடுவோம்.  இந்த அணுகுமுறை உதவாது. இதனை முடிவுக்குக் கொண்டு வர  மக்கள் நம்பிக்கையை நாம் பெற வேண்டும். அப்போதுதான் மாவோயிஸ்ட்களை ஒழிக்க முடியும்.

 

யாருடைய ஆட்சிக்காலத்தில் நக்சலிசம் பெருகியது. 2003-ல் 4 பகுதிகளில் மட்டுமே இருந்தது. இப்போது 14 மாவட்டங்களில் பரவியுள்ளது. முன்னாள் முதல்வர் ரமன்சிங் பிறந்த மாவட்டமான கவர்தாவுக்கும் நக்சலிசம் பரவிவிட்டது.

 

பயங்கரவாதமும், நக்சலிசமும் இவர்கள் ஆட்சியில்தான் அதிகரித்தது என்பது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபிக்கப் படக்கூடியதே. உரியாகட்டும் பதான்கோட்டாகட்டும் புல்வாமாவாகட்டும் அனைத்தும் இவர்கள் ஆட்சியில்தான்.

 

சத்தீஸ்கரில் பாஜக தெளிவாக நக்சலைட்டுக்ளுடன் கைகோர்த்துள்ளனர், இதற்கு மிகப்பெரிய  ஆதாரமாக 2013-ல் காங்கிரஸ் தலைவர் ஜிராம் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டதைக் கூற முடியும்.

 

இவ்வாறு கூறியுள்ளார் பூபேஷ் பாகல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x