Published : 25 Sep 2014 04:21 PM
Last Updated : 25 Sep 2014 04:21 PM

அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

26-ம் தேதி ஐ.நா. பொதுச்சபையில் உரை, ஒபாமாவுடன் சந்திப்பு என முக்கிய நிகழ்வுகள் அவரது பயணத்தில் இடம்பெறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்கச் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது, இலங்கை அதிபர் ராஜபக்ச, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கும் திட்டமில்லை.

முன்னதாக இன்று காலை, அமெரிக்கப் பயணம் தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில்: "அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறேன். இது, ஒபாமாவுடனான எனது முதல் சந்திப்பு" என கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x