Published : 12 Apr 2019 04:53 PM
Last Updated : 12 Apr 2019 04:53 PM
டெல்லியில் கூட்டணி அமைக்கும் முயற்சி கைகூடாமல் இழுபறி நீடிக்க ஆம் ஆத்மி கட்சியே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சித்தது. ஷீலா தீட்சித் உட்பட மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் இது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் ஹரியாணாவில் பரிதாபாத், குர்கான், கர்னால் ஆகிய 3 தொகுதிகள் வேண்டும் என்றும் ஆம் ஆத்மி நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்தநிலையில் ஆம் ஆத்மியுடனான கூட்டணியில் உடன்பாடு ஏற்படாதது பற்றி டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் சாகோ இன்று டெல்லியி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. பஞ்சாப், ஹரியாணாவிலும் கூட்டணியில் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்துகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மிக்கு 4 இடங்கள் வழங்கவும், நாங்கள் 3 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தவும் தயாராக உள்ளோம். இதனை ஆம் ஆத்மி தலைவர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் ஹரியாணா மற்றும் பஞ்சாபில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோருகிறார்கள். இதற்கு வாய்ப்பில்லை. இருகட்சிகளிடையே கூட்டணி அமையாமல் இழுபறிக்க நீடிக்க ஆம் ஆத்மியின் நடவடிக்கையே காரணம்.
இவ்வாறு சாக்கோ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT