Published : 14 Apr 2019 08:56 PM
Last Updated : 14 Apr 2019 08:56 PM
பிஎஸ்பி - சமாஜ்வாதி கட்சிகளின் அரசியல் இந்த தேர்தலுடன் முடிந்துவிடும், அவர்கள் கடையை மூடிவிடுவார்கள் என பிரதமர் மோடி பேசினார்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பேசியதாவது:
பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தொடர்ந்து ஜாதி அரசியல் செய்கின்றன. மேற்கு உத்தர பிரதேசத்தில் கிரிமினல்களை ஊக்குவித்து, சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த பகுதியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு இந்த கட்சிகளே காரணம். இவர்களை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டினார்கள். 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கட்சிகளை மக்கள் நிராகரித்தார்கள். தற்போது இருகட்சிகளும் இணைந்து வந்து வாக்கு கேட்கின்றன.
இவர்களை மக்கள் மீண்டும் புறக்கணிப்பார்கள். இந்த தேர்தலுடன் இந்த இருகட்சிகளின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும். இவர்கள் தங்கள் கடையை மூடி விடுவார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT