Last Updated : 24 Apr, 2019 12:00 AM

 

Published : 24 Apr 2019 12:00 AM
Last Updated : 24 Apr 2019 12:00 AM

பிரச்சாரம் ஓய்ந்த பிறகு வாக்கு சேகரிப்பு: ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

பிரச்சார நேரம் ஓய்ந்தபிறகு வாக்கு சேகரித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் புகார் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக நாடு முழுவதும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜி.சினில் குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி, தேர்தல் விதிகளை மீறி பேசியதாக தேர்தல் ஆணையத்தில் சினில் குமார் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சினில் குமார் கூறும்போது, “வயநாடு தொகுதியில் ஏப்ரல் ஏப்ரல் 21-ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சார நேரம் முடிந்துவிட்டது. ஆனால் 5 மணிக்குப் பின்னரும் ராகுல் காந்தி வாக்கு சேகரித்து தேர்தல் விதிகளை மீறியுள்ளார். அதாவது இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் நியாய் திட்டம் அனைத்து இந்தியருக்கும் கிடைக்கவேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறலாகும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x