Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM
முன்னாள் ராணுவ துணைத் தளபதி சரத் சந்த் நேற்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
ராணுவத்தின் ‘கார்வால் ரைபில்ஸ்’ படைப்பிரிவில் கடந்த 1979-ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் சேர்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி ராணுவத்தின் துணைத் தளபதியாக ஓய்வு பெற்றார். பாஜகவில் இணைந்தது குறித்து சரத் சந்த் கூறும்போது, “தற்போதைய சர்வதேசச் சூழலில் நம் நாட்டுக்கு வலுவான தலைமை தேவைப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப்பண்பு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இதனால் நான் பாஜகவில் இணைந்தேன். ராணுவ வீரர்களின் நலனுக்கான திட்டங்களை பாஜக அரசு அதிகம் செயல்படுத்தியுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT