Last Updated : 26 Apr, 2019 08:05 AM

 

Published : 26 Apr 2019 08:05 AM
Last Updated : 26 Apr 2019 08:05 AM

காங்கிரஸை அகற்றினால் வறுமை ஒழியும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியை அகற்றினாலே வறுமையை ஒழிக்க முடியும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

நம் நாட்டை காங்கிரஸ் கட்சி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது. ஆனால் நம் நாடு இன்னமும் வறுமையை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. வறுமையை ஒழிக்க் அக்கட்சி எந்த ஒரு நடவடிக்கையையும் உருப்படியாக எடுக்கவில்லை.

இப்போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வறுமையை ஒழிக்க 5 கோடி குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் வாக்குறுதி அளிக்கிறார். வாக்குகளைப் பெறுவதற்காக அவர் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார். உண்மை என்னவென்றால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை அகற்றினாலே வறுமை ஒழிந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x