அருணாச்சலப் பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அருணாச்சலப் பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Updated on
1 min read

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேச மாநில தலைநகர் இடாநகரிலிருந்து தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு 40 கி.மீ. ஆழத்தில் நிலைகொண்டிருந்தது.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்ட மாநிலம். இங்கு 1.2 மில்லியன் மக்களுக்கு அதிகமாக உள்ளனர். இந்நிலநடுக்கம் இந்தியாவின் அண்டை நாடான திபெத்திலும் காணப்பட்டதாக சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் பல பத்தாண்டுகளாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு சர்ச்சைக்குரிய கட்டுப்பாட்டில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்துவருகிறது. அதேநேரம் சீனாவும் அதன் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு உரிமை கோரி வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியாக மியான்மரும் பூடானும் உள்ளன.

அமெரிக்க ஜியாலஜிக்கல் சர்வே இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு மற்றும் சேதங்கள் பற்றி தெரிவிக்கும்போது குறைந்த வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in