Published : 27 Apr 2019 07:40 PM
Last Updated : 27 Apr 2019 07:40 PM
மகாராஷ்டிரா மாநிலம் ஷிர்டியில் தேர்தல் பிரச்சாரத்திலி ஈடுபட்டிருந்த போது பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி பிரச்சார மேடையிலேயே மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் உடனேயே எழுந்த அவர் மேடையிலிருந்து தன் காருக்கு நடந்து சென்றார்.
சிவசேனா வேட்பாளர் சதாசிவ லோக்ஹந்தேவை ஆதரித்து நிதின் கட்கரி ரஹதாவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரம் செய்த போது தன் உரையை முடித்த அவர் தன் இருக்கை நோக்கி நடந்து சென்ற போது மேடையிலேயே மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
இதனையடுத்து சிறிது நேரம் சென்று அவர் எழுந்து தன் காருக்கு நடந்து சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT