Published : 02 Apr 2019 07:30 PM
Last Updated : 02 Apr 2019 07:30 PM
பாஜகவிலிருந்து விலகிய நடிகர் சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடியின் கடுமையான விமர்சகர்களில் ஒருவர். கட்சியிலிருக்கும் போதே அவர் பிரதமரை கடுமையாக விமர்சித்து வந்தார்.
அதோடு நில்லாமல் மோடி, அமித் ஷா, ஜேட்லி மூவர் கூட்டணி மீதும் கடும் அரசியல் விமர்சனங்களை வைத்தவர் சத்ருகன் சின்ஹா.
இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களுக்கான பல நல்ல திட்டங்களுடன் வெளிவந்ததையடுத்து சத்ருகன் சின்ஹா, பிரதமர் மோடி சவுகிதார் என்று முன்னொட்டைச் சேர்த்துக் கொண்டது போல் ‘அவுட் கோயிங் சர் ஜி’ என்று பிரதமரை விளிக்க புதிய முன்னொட்டைச் சேர்த்துள்ளார்.
அவர் இது குறித்து தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
சர் ஜி, நீங்கள் ஈவிஎம் எந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினாலும், உங்கள் பெரு மமதை, இறுமாப்பிலும் கூட நான் இன்னமும் உங்கள் நலம் விரும்பிதான். இந்தக் கடைசி நேரத்தில் என்னுடைய எளிய கோரிக்கை என்னவெனில் நேர்மையாக மாறுங்கள், நேர்மையாகச் செல்லுங்கள்.
மாண்புமிகு அவுட் கோயிங் சர் ஜி நீங்கள் ஏன் பணம் கொடுத்து சில சேனல்களை விலைக்கு வாங்கி பணத்தை விரயம் செய்கிறீர்கள்? உருவாக்கப்பட்ட அந்த கூட்டம் தேவையா? அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பெயரை கோஷம் போடுவார்கள், நீங்கள் பேசும்போது, பேசிய பிறகு பேசுவதற்கு முன் உங்கள் கூட்டம் ஏற்பாடு செய்பவர்களின் செய்கைக்கு ஏற்ப கோஷம் எழுவது சகஜம்தானே. உங்கள் ஜோடனைப் பேச்சுகளில் ஒன்றும் இல்லை. ஆழமும் இல்லை உள்ளடக்கமும் இல்லை.
இப்போதெல்லாம் கூறியது கூறல் போல் உங்கள் பேச்சு திரும்பத் திரும்பவும் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது. காசுகொடுத்து பேசும் சானல்களுக்குச் செல்லாதீர்கள், உண்மையான செய்தியாளர்களை எதிர்கொள்ளுங்கள். இவர்கள் விலைக்கு வாங்க முடியாதவர்கள், தேச நலன்களுக்காக கேள்வி கேட்பார்கள், பதில் சொல்லுங்கள். உங்களைத் துதிபாடும் கூட்டத்திற்குச் செல்லாதீர்கள்.
என்று தொடர் ட்வீட்களில் விளாசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT