Last Updated : 16 Apr, 2019 10:04 PM

 

Published : 16 Apr 2019 10:04 PM
Last Updated : 16 Apr 2019 10:04 PM

யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும்.. வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார்: சர்ச்சையான பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் பேச்சு

வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி கேமரா வைத்துள்ளார், யாருக்கு  வாக்களிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும் என்று பாஜக எம்.எல்.ஏ.ஒருவர் பேசிய வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. ரமேஷ் கடாரா வாக்காளர்களிடம் பேசுகையில், தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். நீங்கள் பாஜக வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் பாப்ரா (பாஜக வேட்பாளர்)  புகைப்படத்தை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பார்க்கலாம். அங்கு தாமரை சின்னம் இருக்கும் அதில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். இப்போது நீங்கள் தவறு செய்ய வழியே கிடையாது. ஏனென்றால் பிரதமர் மோடி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

 

யார் பா.ஜனதாவுக்கு வாக்களித்தார், யார் காங்கிரசுக்கு வாக்களித்தார் என்பதை பார்த்துக் கொள்ள முடியும். ஆதார் கார்டு உள்பட நீங்கள் வைத்திருக்கும் கார்டுகள் அனைத்திலும் புகைப்படம் உள்ளது. உங்களுடைய வாக்குச்சாவடியில் குறைவான வாக்குகள் பதிவானால், பிரதமர் மோடிக்கு யார் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வரும். பின்னர் உங்களுக்கு வேலை கிடைக்காது என்று வாக்காளர்களை மிரட்டும் வண்ணம் அவர் பேசியிருப்பது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 

ரமேஷ் கடாரா  ஃபதேபுரா எம்.எல்.ஏ. ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x