Published : 30 Apr 2019 12:00 AM
Last Updated : 30 Apr 2019 12:00 AM
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு தொடர்பான உண்மை நிலவர அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடந்த 22-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், “பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஆயுதப்படைகள் குறித்து தொடர்ந்து பேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருகிறார். அவரது பிரச்சாரத்துக்கு குறிப்பிட்ட காலத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தது.
காங்கிரஸ் கட்சியின் இந்தப் புகாரை தொடர்ந்து, அண்மையில் பார்மர் நகரில்பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு தொடர்பான அறிக்கையை அனுப்பி வைக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பார்மர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஹிமன்ஷு குப்தா நேற்று கூறும்போது, “பார்மரில் பிரதமர் ஆற்றிய உரையின் நகலுடன் உண்மை நிலவர அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
பார்மரில் பிரதமர் நரேந்திர மோடிஅண்மையில் பேசும்போது, “பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா இதற்கு மேலும் அஞ்சாது. எங்களிடம் அணு ஆயுத பொத்தான் உள்ளது என பாகிஸ்தான் ஒவ்வொரு நாளும் கூறி வருகிறது. எங்களிடம் மட்டும் வேறு என்ன உள்ளது? நாங்கள் என்ன தீபாவளி பண்டிகை கொண்டாடவா அணு ஆயுத பொத்தான் வைத்துள்ளோம்?” என கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT