Published : 20 Apr 2019 12:00 AM
Last Updated : 20 Apr 2019 12:00 AM

3-வது அணி என்னவானது ? சந்திரசேகர ராவுக்கு விஜயசாந்தி கேள்வி

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பிரதிநிதியுமான விஜயசாந்தி ஹைதராபாத்தில் நேற்று கூறியதாவது:

காங்கிரஸ், பாஜக இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க போவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியிருந்தார். ஆனால், தற்போது இந்த விஷயத்தில் அவர் மவுனம் சாதிப்பது ஏன்?

இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம், மேற்கு வங்கம், கர்நாடக மாநிலத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதெல்லாம் என்னவானது ? இந்த மாநிலங்களில் மூன்றாவது அணிக்காக அவர் பிரச்சாரம் செய்யாதது ஏன்?

தெலங்கானாவில் தேர்தல் முடியும் வரை இதுபோன்ற கருத்துகளை அவர் தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக சந்திரசேகர ராவ் செயல்பட்டு வருவதே இதற்கு காரணமாகும். இதனை மக்களும் அறிவார்கள். இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x