Published : 12 Apr 2019 03:45 PM
Last Updated : 12 Apr 2019 03:45 PM

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயரிய ‘புனித ஆண்ட்ரூ’ விருது அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து ரஷ்யாவும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருதை அறிவித்து கவுரவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு ஐ.நா மற்றும் பிற நாடுகள் இதுவரை 8 சர்வதேச விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சி எடுத்தல், சூரிய ஒளிமின்சாரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல், ஆகியவற்றுக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய நாடுகள் சபை மிக உயரிய விருதான சுற்றுச்சூழல் விருது (சாம்பியன்ஸ் ஆப் எர்த்) வழங்கிக் கவுரவித்தது.

உலகின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அறிந்து, அதைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மிகவும் துணிச்சலுடனும், புத்தாக்கத்துடனும், தீவிரமான முயற்சிகளுடன் செய்தவர்களுக்கு இநு்த விருது வழங்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் அந்நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. இருதரப்புக்கும் இடையே ராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் மோடி என்று புகழாரம் சூட்டிய ஐக்கிய அரபு அமீரகம், அவருக்கு அந்நாட்டின் உயரிய 'சயீத்' விருதை அளித்தது.

இதைத்தொடர்ந்து. பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யா-இந்தியா இடையே  உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக, ‘புனித ஆண்ட்ரூ’ எனப்படும் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார். இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x