Published : 04 Apr 2019 05:17 PM
Last Updated : 04 Apr 2019 05:17 PM

சத்தீஸ்கரில் நக்சல்களுடனான என்கவுன்ட்டரில் 4 ராணுவ வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் நக்சல்களுடனான என்கவுன்ட்டரின்போது 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். இவர்கள் எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த என்கவுன்ட்டர் சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது.

பங்கஜ்பூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வழக்கமான தேடுதல் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுன்ட்டர் தாக்குதல் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது. இதில் 4 பிஎஸ்எப் வீரர்கள் பலியாகினர். 2 வீரர்கள் காயமடைந்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x