Published : 12 Mar 2019 11:07 AM
Last Updated : 12 Mar 2019 11:07 AM

ஹெரால்டு ஹவுஸ் வழக்கில் மேல்முறையீடு

டெல்லியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் அலுவலகமான ஹெரால்டு ஹவுஸ் கட்டிடம், அரசு குத்தகை நிலத்தில் உள்ளது. இங்கு அச்சுப்பணி மற்றும் வெளியீட்டுப் பணி நடைபெறாததால் குத்தகையை மத்திய அரசு ரத்து செய்தது.

இதற்கு எதிராக பத்திரிகை யின் வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் (ஏஜேஎல்) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் கட்டிடத்தை காலி செய்ய கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிடப்பட்டது. பிறகு தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு கடந்த 28-ம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x