தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி

தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி
Updated on
1 min read

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது. 

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி 2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் தேதி விவரம்:

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி

வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 27-ம் தேதி

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29-ம் தேதி

வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in