மைக்கேல் முன்னாள் மனைவிக்கு சொந்தமான ரூ.6 கோடி சொத்து முடக்கம்

மைக்கேல் முன்னாள் மனைவிக்கு சொந்தமான ரூ.6 கோடி சொத்து முடக்கம்
Updated on
1 min read

இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் இந்தியாவில் உள்ள சிலருக்கு அந்த நிறுவனம் 10 சதவீதம் லஞ்சம் வழங்கியதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளன.

இந்த முறைகேட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், மைக்கேலிடம் நடத்தப்பட் விசாரணையின் அடிப்படையில், பாரிஸ் நகரின் விக்டர் ஹூகோ பகுதியில் மைக்கேலின் முன்னாள் மனைவி வலேரி மிஷெலுக்கு சொந்தமான ரூ.5.83 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்த பேரத்தில் பெற்ற லஞ்சப் பணம், பல்வேறு நிறுவனங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு இந்த சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை கூறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in