Published : 20 Mar 2019 04:25 PM
Last Updated : 20 Mar 2019 04:25 PM
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இரண்டு இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், பல மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சை இன்னும் இறுதி செய்யாமல் காங்கிரஸ் கட்சி உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு தினங்களாக கூட்டணியை இறுதி செய்யும் பணியை காங்கிரஸ் வேகப்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலத்தில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் விரும்பினாலும், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் கடுமையாக இதை எதிர்த்து வருகிறார். ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி பேச்சு குறித்துப் பேச தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் முயன்று வருகிறார்.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சிகளுக்கு இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில் ‘‘ஜம்மு - காஷ்மீ்ர் மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸூம் முடிவு செய்துள்ளன. உதம்பூர், ஜம்மு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி போட்டியிடும். அனந்தநாக் மற்றும் பாரமுல்லா தொகுதிகளில் இருகட்சிகளும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் நட்பு ரீதியான போட்டியாக இரு கட்சிகளும் அங்கு களம் இறங்கும். லடாக் தொகுதியில் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT