ஜம்மு-காஷ்மீர் எல்லையில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் பலி, மூவர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் பலி, மூவர் படுகாயம்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் அருகே உள்ள மெந்தர் நிலையத்தில் திங்கள் அன்று இரவு தீடீரென வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு அலுவலகத்தின் சுமைதூக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

எல்லையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பு எவராலும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in