Published : 12 Mar 2019 11:04 AM
Last Updated : 12 Mar 2019 11:04 AM

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் 4-வது உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. காஷ்மீர் எல்லையில் இருதரப்புக்கும் இடையே நாள்தோறும் கடும் துப்பாக்கி சண்டை நடைபெறுகிறது.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் அத்துமீறி பறந்தது. அந்த விமானத்தை விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல கடந்த 4-ம் தேதி ராஜஸ்தானின் பிகானிர் எல்லைப் பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் உளவு விமானத்தையும் விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

கடந்த 9-ம் தேதி ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் நுழைந்தது. அதனை எல்லை பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியில் மீண்டும் ஓர் ஆளில்லா உளவு விமானத்தின் மூலம் பாகிஸ்தான் ராணுவம் நோட்டமிட்டது. அந்த விமானத்தை ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது 4-வது உளவு விமானமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x