Last Updated : 28 Mar, 2019 07:25 AM

 

Published : 28 Mar 2019 07:25 AM
Last Updated : 28 Mar 2019 07:25 AM

திப்பு சுல்தான் துப்பாக்கி ரூ.55 லட்சத்துக்கு ஏலம்

திப்பு சுல்தான் பயன்படுத்திய துப்பாக்கி சுமார் ரூ.55 லட்சத்துக்கு லண்டனில் ஏலம் விடப்பட்டது.

18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து மைசூர் மண்ணிலிருந்து குரல் கொடுத்த தீரமிக்க ஆட்சியாளர் இவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில் 1799-ல் நடைபெற்ற போரின்போது இவர் மாண்டார்.

இவர் பயன்படுத்திய பொருட்கள் ஆங்கிலேய பிரபுக்கள், அதிகாரிகளால் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்தின் பெர்க்சையர் மாகாணத்திலுள்ள ஒரு தம்பதியர் தங்களது பழைய வீட்டை சுத்தம் செய்தபோது அதில் திப்பு சுல்தான் பயன்படுத்திய துப்பாக்கி, வாள் உள்ளிட்ட 8 அரிய வகை கலைப்பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தார். இவற்றை லண்டனிலுள்ள ஆன்டனி கிரிப் ஆர்ம்ஸ் அண்ட் ஆர்மர் ஆக் ஷன் எனப்படும் ஏல நிறுவனத்திடம் அவர்கள் ஒப் படைத்தனர்.

இந்நிலையில் அந்த பொருட்கள் அண்மையில் ஏலம் விடப்பட்டன. இதில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வெள்ளிப் பூண் போட்ட துப்பாக்கி 60 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.55 லட்சமாகும். 20 போர் பிளின்ட்லாக் என்ற வகையிலான துப்பாக்கியாகும் அது.

மைசூர் அருகேயுள்ள ஸ்ரீரங்கப் பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்பு கொல்லப்பட்டார். அப்போது மைசூரும், ஸ்ரீரங்கப்பட்டணமும் சூறையாடப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தப் பொருட்கள் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x