Published : 08 Mar 2019 07:30 AM
Last Updated : 08 Mar 2019 07:30 AM
தம் மீதான தடையை நீக்கக்கோரி ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீத் தாக்கல் செய்த மனுவை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நிராகரித்துவிட்டது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில், இந்த தாக்குதலை ஜமாத்-உத்-தாவா என்ற தீவிரவாத அமைப்பு நடத்தியது கண்டறியப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீதை தடை செய்யக் கோரி ஐ.நா.வில் இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பேரில், அதே ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி, தடை செய்யப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியலில் ஹபீஸ் சய்யீதின் பெயரை ஐ.நா. சேர்த்தது. இதனிடையே, தம் மீதானஇந்த தடையை நீக்கக் கோரி ஐ.நா.வில் ஹபீஸ் சய்யீத் கடந்த 2017-ல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து வந்த ஐ.நா. சபை, ஹபீஸ் சய்யீதின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், அவர் தொடர்ந்து தடை செய்யப்பட்ட தீவிரவாதி களின் பட்டியலில் நீடிப்பார் எனவும் தற்போது அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT