Published : 27 Mar 2019 08:39 PM
Last Updated : 27 Mar 2019 08:39 PM

சாலை விபத்தில் சிக்கிய பத்திரிகையாளரைக் காப்பாற்றிய ராகுல் காந்தி

ராஜஸ்தானில் உள்ளூர் செய்தித்தாள் நடத்தி வரும் ராஜேந்திர வியாஸ் என்ற பத்திரிகையாளர் சாலை விபத்தில் சிக்கிய போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரைக் காப்பாற்றியுள்ளார்.

 

புதன் மதியம் புதுடெல்லி ஹுமாயுன் சாலையில்  ராஜேந்திர வியாஸ் சாலையைக் கடந்த போது வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு கீழே விழுந்தார், அப்போது அவ்வழியாகச் சென்ற ராகுல் காந்தி தன் வாகனத்திலிருந்து இறங்கி மற்ற பாதுகாவலருடன் சேர்ந்து அவரைக் காப்பாற்றி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அனுமதித்தார்.

 

மதியம் சுமார் 1.30 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி காயமடைந்த வியாஸுடன் வந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது அவரை மருத்துவர்கள் சோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகே வியாஸ் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

 

பத்திரைகையாளர் முதலுதவி முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் வரை ராகுல் காந்தி அவருடன் இருந்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x