Published : 02 Mar 2019 08:58 AM
Last Updated : 02 Mar 2019 08:58 AM

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், பிடிஐ செய்தி நிறுவனத் திடம் கூறியதாவது:

இந்திய விமானி அபிநந் தனை பாகிஸ்தான் விடுதலை செய்திருப்பதை வரவேற்கி றோம். இந்தியாவும் பாகிஸ் தானும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண் டும். இருநாடுகளும் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ் தான் புகலிடம் அளிக்கக்கூடாது. தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x