Published : 07 Mar 2019 01:41 PM
Last Updated : 07 Mar 2019 01:41 PM

காங்கிரஸில் 12-ம் தேதி இணைகிறார் ஹர்திக் படேல்?

குஜராத் இடஒதுக்கீடு கோரி போராடிய ஹர்திக் படேல் வரும் 12-ம் தேதி காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்திவரும் ஹர்திக் படேல், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கோர் போன்ற இளம் தலைவர்கள் பிரபலமடைந்தனர். இவர்களில் அல்பேஷ் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். மேவானி சுயேச்சை எம்எல்ஏவாக இருக்கிறார்.

மக்களவை தேர்தலில் மேவானியும், ஹர்திக் படேலும், காங்கிரஸூடன் கரம் கோர்க்க விரும்புகின்றனர். குறிப்பாக ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்க ஹர்திக் படேல் விரும்புகிறார். ஆனால் சுயேச்சை வேட்பாளராக ஹர்திக் படேலுக்கு ஆதரவு தர காங்கிரஸ் விரும்பவில்லை. மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸே நேரடியாக களமிறங்கும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சத்வா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஹர்திக் படேல் விரைவில் காங்கிரஸில் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 12-ம் தேதி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் குஜராத் மாநிலத்துக்கு வருகை தரவுள்ளனர். அப்போது ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஹர்திக் படேல் காங்கிரஸூல் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி ஹர்திக் படேல் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x