Published : 22 Mar 2019 07:32 AM
Last Updated : 22 Mar 2019 07:32 AM

மகனின் சடலம் மாறி வந்ததால் கேரள குடும்பத்தினர் அதிர்ச்சி

சவுதி அரேபியாவில் இறந்த மகனின் சடலத்துக்கு பதிலாக இலங்கை பெண்ணின் சடலம் வந்ததால் கேரள குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பத்தனம்திட்டா மாவட்டம் கொன்னி பகுதியை சேர்ந்த ரஃபீக் (29) என்ற இளைஞர் சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில்  பணியாற்றி வந்தார். இவர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மாரடைப்பால் இறந்தார். இந்நிலையில் அவரது உடலுக்கு பதிலாக  பெண் ஒருவரின் சடலம் ரஃபீக் வீட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கொன்னி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ரஃபீக் சடலம் இலங்கைக்கும், இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் கேரளாவுக்கும் தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பவும் அங்குள்ள ரஃபீக் சடலத்தை கேரளா கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x