Last Updated : 15 Mar, 2019 04:08 PM

 

Published : 15 Mar 2019 04:08 PM
Last Updated : 15 Mar 2019 04:08 PM

தேர்தல் வெற்றியே கன்ஷிராமுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி: மாயாவதி வேண்டுகோள்

வரும் மக்களவைத் தேர்தலில் நமது கட்சிக்கு நல்ல வெற்றியைப் பெற உறுதியளிப்பதே கட்சியின் கன்ஷிராமுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் பிறந்தநாள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சியின் இப்போதைய தலைவரும் உ.பியின் முன்னாள் முதல்வருமான மாயாவதி இன்று கன்ஷிராம் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது தனது தொண்டர்களிடம் அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில் அவரது பிறந்தநாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும், இதர தலைவர்களும் நமது அரசியல் எதிரிகளின் அனைத்துவிதமான தந்திரங்களையும் முறியடித்து விழிப்புடன் செயல்பட்டு தேர்தலில் நல்ல முடிவுகளை உறுதிப்படுத்துவதே கன்ஷிராம்ஜிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

இத்தேர்தலில் அவரது தொண்டர்களாகிய நாம் சிறந்த முறையில் செயல்படவேண்டும். எந்தவிதமான நடத்தை விதிமீறல்களிலும் ஈடுபடாமல் கட்சி அமைத்துள்ள ஒழுங்குமுறைகளிலிருந்தே தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

நாட்டிற்கு கன்ஷிராம் ஆற்றிய சேவையாற்றிய வகையில் அவர் ஒரு விலைமதிப்பற்ற ரத்தினம் ஆவார். நாம் ஆட்சியிலிருந்த காலத்தில் அவரது நினைவை போற்றும்வகையில் அவருக்கு உரிய மரியாதையையும் கவுரவத்தையும் அளித்துள்ளோம். அவ்வகையில் மற்ற தலைவர்களின் பங்களிப்பையும் நாம் போற்றித் தவறவில்லை.

இவ்வாறு மாயாவதி தொண்டர்களிடையே பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x