Last Updated : 25 Mar, 2019 07:36 PM

 

Published : 25 Mar 2019 07:36 PM
Last Updated : 25 Mar 2019 07:36 PM

மக்களவைத் தேர்தல் 2019: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்-திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி  தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

மார்ச் 25ம் தேதி கொல்கத்தா சென்ற கமல்ஹாசன் முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்தார், சுமார் 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது, இதனையடுத்து இந்த அறிவிப்பை மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது என கூறியுள்ளார். அந்தமான் நிக்கோபர் தீவில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கிறது. கமல்ஹாசனின் கட்சி அங்கு ஆதரவு அளிக்கிறது, என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

கமல்ஹாசன் கூறும்போது, அந்தமானில் திரிணாமுல் காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைப்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். வருங்காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x