Last Updated : 05 Mar, 2019 08:35 AM

 

Published : 05 Mar 2019 08:35 AM
Last Updated : 05 Mar 2019 08:35 AM

பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி நேற்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறும்போது, “அக்னூர் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிகாலை 3 மணிக்கு தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. காலை 6.30 மணிக்கு இந்த சண்டை ஓய்ந்தது. எனினும், இதில் இந்திய தரப்பில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x