Published : 01 Mar 2019 07:54 AM
Last Updated : 01 Mar 2019 07:54 AM
அறிவியல், தொழில்நுட்ப துறை யில் சிறந்து விளங்குவோருக்கு 'சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நீங்கள் ஒரு ஆய்வகத்தில் பணியாற்றினால் முதல்கட்டமாக 'பைலட்' ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து முன் னேறி செல்லலாம். இப்போது ஒரு 'பைலட்' திட்டம் வெற்றி பெற் றுள்ளது. இதற்கு முன்பு செய்முறை தேர்வும் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
இந்திய விமானி (பைலட்) அபிநந்தன் விடுதலையை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சுட்டிக் காட்டிப் பேசியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016 செப்டம்பரில் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதனை செய்முறை தேர்வு என்றும் இப்போது பாலகோட் உள்ளிட்ட தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை பைலட் திட்டம் என்றும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியதாகக் கூறப்படு கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT