Published : 15 Mar 2019 08:43 AM
Last Updated : 15 Mar 2019 08:43 AM

மும்பை நடைபாலம் உடைந்து 5 பேர் பலி; 34 பேர் காயம்

மும்பை ரயில் முனையத்தில் நடைபாலம் உடைந்து 5 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயம் அடைந்தனர்.

மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையம் உள்ளது. இந்த முனையத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இங்குள்ள நடைமேடை நேற்றிரவு 7.30 மணிக்கு உடைந்து விழுந்தது.

பாலத்தில் மேல் நடந்து சென்று கொண்டிருந்த பயணிகள் மொத்தமாக கீழே விழுந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து நேரில் பார்த்த சாட்சிகள் கூறும்போது, "பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பயணிகள் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். ரயில் முனையத்தின் வடக்குப் பகுதி முதல் நடைமேடையையும் பி.டி. லேனையும் இணைக்கும் நடைமேம்பாலத்தில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருந்தது. திடீரென பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x