Published : 30 Sep 2014 09:39 AM
Last Updated : 30 Sep 2014 09:39 AM

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ஏழுமலையானின் உண்டியல் வருமானம்: ரூ.900 கோடியை நெருங்குகிறது

உலகின் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஏழுமலை யானுக்கு பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 1975-ல் வெறும் ரூ.6 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் இப்போது ரூ.900 கோடியை நெருங்கி உள்ளது.

ஏழுமலையானை தரிசிப்பதற் காக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலி ருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்யும் இவர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.

சாமி உண்டியலில் பணம் மட்டுமின்றி தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், விசிடிங் கார்டுகள், கல்யாண பத்திரிக்கைகள் போன்ற வையும் இருக்கும். உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் தினந்தோறும் எண்ணப்படுகின்றன. இதில் தேவஸ்தான, வங்கி ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த 1975-ம் ஆண்டுக்கு முன்பு உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை, சேவை டிக்கெட்டுகள் விற்பனை ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் தினமும் வரவு வைத்தனர். 1975-க்கு பிறகு உண்டியல் வருமானம் மட்டும் தனியாக வரவில் வைக்கப்பட்டது. தினந்தோறும் எண்ணப்படும் பணம் அன்றைய தினமே வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுதோறும் உண்டியல் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 1975-76-ம் ஆண்டில் ரூ.5.84 கோடியாக இருந்த உண்டியல் வருமானம், 1985-86-ம் ஆண்டில் ரூ.15.86 கோடியாக அதிகரித்தது. இது 1995-96-ல் ரூ.85.06 கோடியாகவும், 2005-06-ல் ரூ.307 கோடியாகவும் அதிகரித்தது.

2005-ம் ஆண்டுக்குப் பிறகு உண்டியல் வருமானம் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.1 கோடியாக இருந்தது.

பின்னர் அதிகரிக்கத் தொடங்கி, 2010-11-ல் ஆண்டுக்கு ரூ.675.85 கோடியாகவும், 2011-12-ல் ரூ.782.23 கோடியாகவும் வருமானம் அதிகரித்தது. இது 2012-13-ல் ரூ.859 கோடியானது. 2013-14-ல் உண்டியல் வருமானம் ரூ.900 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x