Last Updated : 27 Mar, 2019 07:37 AM

 

Published : 27 Mar 2019 07:37 AM
Last Updated : 27 Mar 2019 07:37 AM

நூறு நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்த அனுமதி கோருகிறது மத்திய அரசு

நூறுநாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் மாற்றியமைக்க தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை மத்திய அரசு கோரியுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது,

“விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டுடன் (சிபிஐ-ஏஎல்) மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதிய ஊதியத்தை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளோம்” என்று தெரிவித்தன.

அமைச்சக வட்டாரங்கள் மேலும் கூறும்போது, “நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வெவ்வேறு மாநிலத்திலும் வெவ்வேறுஊதியம் வழங்கப்படுகிறது. எனவே ஊதிய உயர்வும் வேறுபட்டதாக இருக்கும். இந்த உயர்வு 5 சதவீதம் வரை இருக்கும்” என்று தெரிவித்தன.

2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x