Published : 22 Mar 2019 08:18 PM
Last Updated : 22 Mar 2019 08:18 PM

ஏர் இந்தியா ஊழியருக்கு  ‘பளார்’ விட்ட எம்.பி.க்கு தேர்தல் சீட் இல்லை.. ரம்ஜானின் போது முஸ்லிம் ஊழியருக்கு உணவை வாயில் திணித்தவருக்கு மீண்டும் சீட்

மக்களவைத் தேர்தல் 2019-க்காக சிவசேனா 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஏர் இந்தியா ஊழியரை அடித்த தன் கட்சி எம்.பி.க்கு சீட் அளிக்கவில்லை.

 

ஓஸ்மனாபாத் தொகுதியைச் சேர்ந்த 59 வயது எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்  ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்து அதை பெருமையாக வெளியில் ஜம்பமடித்துக் கொண்டது நினைவிருக்கலாம். அப்போது அது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியது.

 

ஆனால் இன்னொரு பெரிய சர்ச்சையில் சிக்கிய ராஜன் விகாரே தானே தொகுதியில் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார், இவர் மேல் எழுந்த சர்ச்சை மேற்படி சர்ச்சையை விட அபாயகரமானது. 2014ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது காண்டீனில் வேலை செய்த முஸ்லிம் ஊழியர் ஒருவருக்கு அவர் விரதம் என்று தெரிந்தும் அவரது மத உணர்வுகளை புண்படுத்துமாறு அவருக்கு உணவை வலுக்கட்டாயமாக வாயில் திணித்தார்.

 

அவர் மீது 8 போலீஸ் வழக்குகள் போடப்பட்டன.

 

2014-ல் சிவசேனா 20 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு 18-ல் வென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x