Published : 25 Mar 2019 04:12 PM
Last Updated : 25 Mar 2019 04:12 PM
பாஜக தலைவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களையே தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்; ஏன், தங்களின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டியதுதானே என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:
மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகள்தான் வேண்டும். சவுகிதார் (காவலாளி) அல்ல.
உத்திரப் பிரதேச பாஜக ஆட்சியில் மற்றவர்களை ஒப்பிடுகையில் ஒப்பந்த ஆசிரியர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த மோசமான நிலை மாற வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.
பாஜகவின் பிரச்சாரக் கூட்டங்களில் பெரும்பாலும் எதிர்க்கட்சியினரையே ஏன் குறிவைத்து தாக்குகிறார்கள்? கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதித்ததாக சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா அவர்களுக்கு?
மக்கள் கோபத்தையும் தோல்வியையும் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள், ஆனால் பாஜக தலைவர்களும் தொண்டர்களும் வெயில் கடுமையாக இருக்கிறது என்று பிரச்சாரத்தைத் தவிர்க்க சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT